பாடசாலை ஆய்வுகூட விபத்து: ஆசிரியை, மற்றும் இரு மாணவிகள் காயம்.!
பதுளை – பண்டாரவளை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் விஞ்ஞான ஆய்வுகூடத்தில் இடம்பெற்ற பரிசோதனையின் போது பீக்கர் ஒன்று வெடித்ததில் ஆசிரியை ஒருவரும் இரு மாணவிகளும் காயமடைந்துள்ளனர்.இச் சம்பவம் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது.
11ஆம் தரத்தில் கல்வி பயிலும் 16 வயதுடைய இரு மாணவிகளும், 48 வயதுடைய ஆசிரியை ஒருவருமே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் தியத்தலாவ ஆதார வைத்தியசாலை மற்றும் பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவர்களுக்கான விஞ்ஞான பரிசோதனை நடைபெற்று கொண்டிருந்தபோது, இரசாயனப் பொருட்கள் அடங்கிய பீக்கர் ஒன்றை வெப்பமூட்டிய நிலையில் இந்த வெடிப்பு ஏற்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இச்சம்பவம் தொடர்பாக பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.