உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

மன்னாரில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
31 பார்வைகள்

பெண்களின் வலிமை, துணிவு மற்றும் சாதனைகளை கொண்டாடுவோம் எனும் கருப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (8) மாலை மன்னாரில் இடம்பெற்றது.

மன்னார் நகர சிறுவர் பூங்கா அரங்கில் மன்னார் குடிசார் அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட பகுதி பெண்கள் அமைப்புகள் கூட்டாக இணைந்து சர்வதேச மகளிர் தின நிகழ்வை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் பிரதேச செயலாளர் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த நிகழ்வில் சாதனைப் பெண்கள் மற்றும் பெண்களோடு தோல் நின்று உழைக்கும் ஆண்களுக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதையடுத்து கிறீன் பீஸ் சவுத் ஏசியா (GREENPEACE SOUTH ASIA ) அமைப்பின் அனுசரனையுடன் மன்னார் பிரதான நூலக சுவரில் பெண்களால் வரையப்பட்ட பிரம்மாண்டமான சுவரோவியம் காட்சிப்படுத்தலுக்காக வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. காலநிலை நீதிக்கான பெண்கள் எனும் தொனிப்பொருளில் குறித்த ஓவியம் பெண்களினால் வரையப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

மன்னார் பொது நூலகத்தின் வெளிப்புறச் சுவரில் உருவாக்கப்பட்டுள்ள புதிய சமூக சுவரோவியம், கலை, அறிவியல் மற்றும் சமூகத்தின் குரல்களை ஒன்றிணைத்து, இந்தத் தீவின் வளமான உயிரியல் பல் வகைமையையும் காலநிலை பேரிடர்களுக்கு எதிராக பெண்கள் காட்டும் தலைமையையும் வெளிச்சமிட்டு காட்டுகின்றமை சிறப்பம்சமாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0