உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

காடுகளுக்கு தீ வைக்கும் விஷமிகள்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

மத்திய மலைநாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட காடுகளில் விஷமிகள் தீ வைப்பது அதிகரித்து வருவதால் நீர் ஆதாரங்கள் மற்றும் வனவிலங்குகளை அழிந்து வருகிறது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் ஒரு மாதத்திற்கும் மேலாக நிலவும் கடுமையான வறண்ட வானிலை காரணமாக, நீர் மின் நிலையங்களுக்கு நீர் வழங்கும் நீர்த்தேக்கங்களுக்கு ஒதுக்கப்பட்ட காடுகள் மற்றும் மானா பற்றைகள் விஷமிகளால் தீ வைக்கப்படுகிறது.

அதன் காரணமாக பல ஏக்கர் காடுகள் அழிக்கப்படுவதால் அவை வறண்டு போகும் அபாயம் உள்ளது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இந்தப் பகுதிகளில் சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் பொழுதுபோக்கு மற்றும் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக இந்த தீ வைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

தேசிய நீர் மின் அமைப்பின் மவுசாகலை, காசல்ரீ மற்றும் மேல் கொத்மலை நீர் மின் நிலையங்களுக்கு முக்கிய நீர் ஆதாரங்களாக இருக்கும் காடுகள் மற்றும் மானா பற்றைகளை எரிப்பதால் நீர் ஆதாரங்கள் வறண்டு முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் வேகமாகக் குறைகிறது.

மவுஸ்சாகலை மற்றும் காசல்,ரீ மேல் கொத்மலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் (01) காலை நிலவரப்படி, நிரம்பி வழியும் மட்டத்திலிருந்து முறையே 10 மற்றும் 15 அடி குறைந்துள்ளதாக நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பான பொறியாளர்கள் தெரிவித்தனர்.

சுற்றுச்சூழல் அமைப்புகளும், அப்பகுதி மக்களும் இதுபோன்ற செயல்களைச் செய்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு பொறுப்பானவர்கள் வலியுறுத்துகின்றனர்.

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் வெகுவாக குறைந்து வருகிறது. அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள நீர்த்தேக்க பகுதியில் உள்ள அனைத்து பற்றைகளுக்கும் விஷமிகள் தீ வைத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோருக்கு செப்டெம்பர் 3 வரை விளக்கமறியல்

படம் இணைப்பு – ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர்செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு! பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கருதப்படும்…

50 0 0
இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

62 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

33 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

53 0 0