மஸ்கெலியா எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட வரிசையில் வாகனங்கள்.!
திடீரென மஸ்கெலியா எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அதிகளவில் வாகனங்கள் எரிபொருள் கொள்வனவில் ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு எரிபொருள் கொள்வனவில் ஈடுபட்டுள்ளதால் வாகனங்கள் வரிசையில் மணித்தியால கணக்காக காத்து நிற்கும் நிலை ஏற்பட்டது.
இது குறித்து எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள முகாமையாளரிடம் கேட்டபோது அவர் இது குறித்து தெரிவிக்கையில்,
நேற்று இரவு முதல் எம்மிடம் கையிருப்பில் உள்ள டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய், எரிபொருள் எரிவாயு போன்றவற்றை விநியோகம் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
