உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சிவனடிபாத மலைக்கு அதிகளவில் யாத்திரிகர்கள் வருகை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
39 பார்வைகள்

கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி பௌர்ணமி தினத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிவனடிபாத மலை பருவகாலத்தில் டித்வா புயலின் காரணமாக யாத்திரிகர்கள் வருகை வீழ்ச்சி அடைந்தது.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக சிவனடிபாத மலைக்கு வரும் யாத்திரிகர்கள் வருகை பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, இன்று ஞாயிற்றுக்கிழமை, நாளை பௌர்ணமி தினம் என்பதாலும் அதிகளவில் யாத்திரிகர்கள் வருகை தந்த நிலையில் உள்ளனர்.

மேலும், யாத்திரிகர்கள் வருகை தந்த வாகனங்கள் நல்லதண்ணி நகரில் உள்ள தரிப்பிடங்களில் நிரம்பி நல்லதண்ணி மரே சாலையிலும் நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான சாலையிலும் சுமார் ஆறு கிலோமீற்றர் தூரம் வரை நிறுத்தப்பட்டுள்ளது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மேலும் உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் மற்றும் யாத்திரிகர்கள் நலன் கருதி அதிகளவான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் மதுபோதை மற்றும் போதைப்பொருட்கள் கொண்டு வரும் நபர்களை அடையாளம் காண வீதி தடை இட்டு வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் அவர் மேலும் கூறினார்.

மலை உச்சிக்கு செல்லும் வழியில் அதிக அளவில் யாத்திரிகர்கள் செல்வதால் யாத்திரிகர்கள் வழிபட தாமதம் ஏற்படும் அபாயமும் உள்ளது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோருக்கு செப்டெம்பர் 3 வரை விளக்கமறியல்

படம் இணைப்பு – ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர்செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு! பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கருதப்படும்…

50 0 0
இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

62 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

33 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

53 0 0