உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பருத்தித்துறை கடலில் மாயமான இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
40 பார்வைகள்

யாழ். வடமராட்சி வடக்கு, பருத்தித்துறைக் கடலில் மீன்பிடி நடவடிக்கையின் போது தவறி விழுந்து காணாமல்போன தொழிலாளி, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது,
பருத்தித்துறை கொட்டடிப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இருவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடலுக்குத் தொழிலுக்குச் சென்றுள்ளனர். இதன்போது, அவர்கள் சென்ற படகின் இயந்திரத்தில் தூண்டில் கயிறு சிக்கியுள்ளது. அதனைச் சீர்செய்ய முற்பட்ட போது, படகிலிருந்த ஒரு தொழிலாளி எதிர்பாராத விதமாகத் தவறி கடலில் விழுந்து அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவருடன் சென்ற சக தொழிலாளி வழங்கிய தகவலைத் தொடர்ந்து, பருத்தித்துறை கொட்டடிப் பகுதி மீனவர்கள் உடனடியாகத் தேடுதல் பணியில் இறங்கினர். சுமார் 25 இற்கும் மேற்பட்ட படகுகளில் சிதறிச் சென்று தீவிரமாகத் தேடி வந்த நிலையில், இன்று காலை 10 மணியளவில் அந்தத் தொழிலாளியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டு கரைக்குக் கொண்டு வரப்பட்டது.

இச்சம்பவத்தில் பருத்தித்துறை, கொட்டடியைச் சேர்ந்த விஜயகுமார் நிக்சன் (வயது 23) என்ற ஒரு குழந்தையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

சடலம் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

23 வயதான இளம் தந்தை ஒருவரின் உயிரிழப்பு பருத்தித்துறை – கொட்டடி மீனவக் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோருக்கு செப்டெம்பர் 3 வரை விளக்கமறியல்

படம் இணைப்பு – ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர்செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு! பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கருதப்படும்…

50 0 0
இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

62 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

33 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

53 0 0