உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

இளைஞனின் கோடரி தாக்குதலில் மூதாட்டி உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
36 பார்வைகள்

அண்டை வீட்டு உறவினரான இளைஞன் ஒருவரால் கோடரியால் தாக்கப்பட்டு, படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த 71 வயதுடைய மூதாட்டி ஒருவர், 16 நாட்களுக்குப் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
களுத்துறை தெற்கு, கிதுலாவ, லாகோஸ்வத்த ஜன உதான கிராமத்தைச் சேர்ந்த எச். பி. யசவதி (வயது 71) என்ற மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 11ஆம் திகதி இக் கொடூரமான தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர் மூதாட்டியின் முகத்திலேயே கோடரியால் கடுமையாகத் தாக்கியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான மூதாட்டி தனது வீட்டின் வரவேற்பறையில் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை அவரது மருமகள் முதலில் கண்டுள்ளார். குற்றச்செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட கோடரியையும் பொலிஸார் அதே இடத்திலிருந்து கைப்பற்றியுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான மூதாட்டி களுத்துறை நாகொட வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, 16 நாட்கள் உயிருக்குப் போராடி வந்த நிலையிலேயே நேற்று உயிரிழந்துள்ளார்.

தாக்குதலை நடத்தினார் எனக் கருதப்படும் உறவினரான இளைஞன், சம்பவம் இடம்பெற்ற அன்றைய தினமே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும், இந்தத் தாக்குதலுக்கான துல்லியமான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோருக்கு செப்டெம்பர் 3 வரை விளக்கமறியல்

படம் இணைப்பு – ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர்செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு! பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கருதப்படும்…

50 0 0
இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

62 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

33 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

53 0 0