உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

கடலில் மூழ்கி மாணவன் மாயம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

களுத்துறை, கட்டுக்குருந்த கடற்பரப்பில் நீராடச் சென்ற 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் இராட்சத அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளார் என்று களுத்துறை தெற்கு தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
மொரட்டுவை புனித செபஸ்தியான் கல்லூரியின் உயர்தரத்தில் கணிதப் பிரிவில் பயின்று வரும், களுத்துறை நாகொடை பகுதியைச் சேர்ந்த லினாஷ் தேவமிக (வயது 17) என்ற மாணவனே இவ்வாறு மாயமாகியுள்ளார்.

மேற்படி மாணவன் நேற்று மாலை தனது நண்பர்கள் மூவருடன் இணைந்து பொழுதுபோக்குக்காக கட்டுக்குருந்த கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்த போது, திடீரென உருவான பலத்த இராட்சத அலையில் சிக்கிய மாணவன், நண்பர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இதன்போது நண்பர்கள் கூச்சலிட்டதை அடுத்து அங்கிருந்தவர்கள் உதவ முற்பட்டும், மாணவன் கடலில் அடித்துச் செல்லப்பட்டார்.

மாணவன் மாயமானதையடுத்து, பிரதேச மக்களும் மீனவர்களும் இணைந்து கடலில் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இது தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், கடற்படையினரின் உதவியுடன் தேடுதல் பணிகளை விரிவுபடுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோருக்கு செப்டெம்பர் 3 வரை விளக்கமறியல்

படம் இணைப்பு – ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர்செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு! பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கருதப்படும்…

50 0 0
இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

62 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

33 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

53 0 0