உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

யாழில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு கிடையாது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
29 பார்வைகள்

யாழ்ப்பாண மாவட்டத்திற்குத் தேவையான பெற்றோல் கையிருப்பில் உள்ளதால் பொதுமக்கள் தேவையற்ற பீதியடைய வேண்டாம் என மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார்.

செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை உருவாக்குவதைத் தவிர்க்குமாறும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“காங்கேசன்துறையிலுள்ள பெற்றோல் களஞ்சிய முனையமானது வழமைபோல் இன்று ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டிருக்கும். இதனால், மாவட்டத்திலுள்ள சகல எரிபொருள் நிலையங்களுக்கும் நாளை திங்கட்கிழமை முதல் வழமை போன்று பெற்றோல் விநியோகிக்கப்படும்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவருடன் நேற்று நான் தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு கலந்துரையாடினேன். இதன்போது, நாட்டுக்குத் தேவையான ஒரு மாதத்திற்கும் அதிகமான காலத்திற்குப் போதுமான பெற்றோல் கையிருப்பில் இருப்பதாக அவர் என்னிடம் உறுதிப்படத் தெரிவித்தார்.

எனவே, பொதுமக்கள் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து நிலவும் வதந்திகளை நம்பித் தேவையற்ற முறையில் எரிபொருளைச் சேமிக்க முற்பட வேண்டாம். யாழ். மாவட்டத்திற்குத் தேவையான எரிபொருள் விநியோகம் சீராக முன்னெடுக்கப்படும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோருக்கு செப்டெம்பர் 3 வரை விளக்கமறியல்

படம் இணைப்பு – ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர்செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு! பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கருதப்படும்…

50 0 0
இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

62 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

33 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

53 0 0