அவசர நிலக்கரி தேவைக்கு டெண்டர் கோரிய லங்கா நிலக்கரி நிறுவனம்.!
லங்கா நிலக்கரி நிறுவனம், நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையம் தேவைக்காக 3 இலட்சம் மெட்ரிக் தொன் நிலக்கரியை அவசரமாகக் கொள்வனவு செய்ய டெண்டர் கோரியுள்ளது.இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், 2026 மார்ச் – ஏப்ரல் காலப்பகுதிக்கான அவசர நிலக்கரி கொள்வனவுகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் காரணமாக நாடு முழுவதும் சர்ச்சை நிலவி வரும் நிலையில், இவ்வாறு அவசர கொள்வனவுக்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது.
குறித்த அறிவிப்பு கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி வெளியிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.அதன்படி, 2026 மார்ச் – ஏப்ரல் மாதங்களுக்கான தேவையை முன்னிட்டு, 3 இலட்சம் மெட்ரிக் தொன் நிலக்கரியைப் பெறுவதற்கான கொள்முதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.