உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

“யுத்தம் முடிந்தாலே மோதல்கள் முடிவதில்லை” – நோர்வே நாடாளுமன்றத்தில் தாயகத்தின் நீதிக்காக கம்ஷாயினி குணரத்னம் குரல்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
36 பார்வைகள்

கம்ஷாயினி குணரத்னம் இலங்கையின் சமகால நிலைவரம் தொடர்பாக நோர்வே நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விசேட விவாதத்தின் போது கருத்துத் தெரிவித்துள்ளார்.அவரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவின் அடிப்படையில் இடம்பெற்ற இந்த விவாதத்தில், “ஒரு நாட்டில் யுத்தம் முடிவுக்கு வருவதை, அந்நாட்டில் நிலவும் மோதல்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டதாகக் கருத முடியாது” என அவர் குறிப்பிட்டார்.


1988 ஆம் ஆண்டு இலங்கையில் யுத்தச் சூழலில் பிறந்ததாக தெரிவித்த அவர், விமானத் தாக்குதல் எச்சரிக்கைகள் ஒலிக்கும் போதெல்லாம் தமது தாய் கோயில்களிலும் பாடசாலைகளிலும் தஞ்சம் புகுந்ததாக நினைவுகூர்ந்தார். பின்னர் தமது குடும்பம் பாதுகாப்பான வாழ்வை நாடி நோர்வேக்கு இடம்பெயர்ந்ததாகவும் கூறினார்.

2009 ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்தாலும், அதன் விளைவுகள் தொடர்ந்தும் உணரப்படுகின்றன என்றார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அண்மையில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகள் கடந்தகால சம்பவங்களை நினைவூட்டுவதாகவும் தெரிவித்தார். குறிப்பாக, செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் குறித்து கவலை வெளியிட்டார்.


2024 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தேர்தல்கள் சர்வதேச அளவில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியதாகவும், புதிய அரசின் ஊழல் எதிர்ப்பு நிலைப்பாடும் அரசியல் சீர்திருத்த வாக்குறுதிகளும் அதற்கு காரணமாக அமைந்ததாகவும் அவர் கூறினார்.
எனினும், அவை நடைமுறையில் அமுல்படுத்தப்படுகின்றனவா என்ற கேள்வி எழுகின்றதாக சுட்டிக்காட்டிய அவர், தமிழர் வாழும் பகுதிகளில் மத மற்றும் நில உரிமை தொடர்பான பிரச்சினைகள் தொடர்ந்தும் நிலவுவதாக குறிப்பிட்டார்.வடக்கு மற்றும் கிழக்கில் புதிய மனிதப் புதைகுழிகள் கண்டறியப்படுவதும், சில நிலப்பகுதிகள் இன்னமும் இராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பதும் கவலையளிப்பதாக அவர் தனது உரையில் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோருக்கு
செப்டெம்பர் 3 வரை விளக்கமறியல்

படம் இணைப்பு – ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர்செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு! பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கருதப்படும்…

42 0 0
இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

59 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

33 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

52 0 0