உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மனித உரிமைகள் தொடர்பில் இலங்கைக்கு நோர்வே எச்சரிக்கை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
45 பார்வைகள்

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள் குறித்து நோர்வே அரசு தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. அதேபோல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விவகாரம் மற்றும் செம்மணி பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி உள்ளிட்ட விடயங்களில் வெளிப்படையான மற்றும் நியாயமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் நோர்வே வலியுறுத்தியுள்ளது.


நோர்வே நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விசேட விவாதத்தின் போது, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்பென் பார்த் ஐடே இதனைத் தெரிவித்தார். நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர் கம்ஷாயினி குணரத்னம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த கருத்துகளை முன்வைத்தார்.

அமைச்சர் மேலும் கூறுகையில், 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களின் பின்னர் இலங்கையில் புதிய அரசியல் சூழல் உருவாகியுள்ளதை நோர்வே வரவேற்கின்றது எனவும், ஊழல் ஒழிப்பு, பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துதல் போன்ற அரசின் வாக்குறுதிகள் முக்கியமானவை எனவும் குறிப்பிட்டார்.


எனினும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடரும் பிரச்சினைகள் குறித்து இலங்கை அரசுடன் கலந்துரையாடி வருவதாகவும், மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் வெளிப்படையாகவும் நியாயமாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதில் நோர்வே உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சர்வதேச சமூகத்துக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைவாக இலங்கை அரசு செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

55 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

27 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

50 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொது நிகழ்வுகளில் ஒளிப் பயன்பாடு குறித்து முக்கிய தீர்மானம்!

திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக நியமத்துணைவிதிகளை உருவாக்குவதற்கும்,…

71 0 0