உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

இருபது கோடி ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருளுடன் விடுதி ஊழியர் கைது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

காலி மாவட்டம், அஹுங்கல்லை பகுதியில் சுமார் 20 கோடி ரூபாய் பெறுமதியுடைய ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அஹுங்கல்லை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் வதுகெதர, ஆந்தாதொல பகுதியில் சந்தேகநபர் வாடகைக்கு எடுத்திருந்த இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்தப் பெரும் போதைப்பொருள் களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கிருந்து சுமார் 15 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் 5 கோடி ரூபாய் பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர் பலபிட்டிய, மகலதூவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய விடுதி ஊழியர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் குறித்த இல்லத்தை வாடகைக்கு எடுத்து, அதை போதைப்பொருள் விநியோக நிலையமாகப் பயன்படுத்தி வந்ததாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருள் எவ்வாறு இவரிடம் வந்தது மற்றும் இதன் பின்னணியில் உள்ள பிரதான கடத்தல் குழு குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

55 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

27 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

50 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொது நிகழ்வுகளில் ஒளிப் பயன்பாடு குறித்து முக்கிய தீர்மானம்!

திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக நியமத்துணைவிதிகளை உருவாக்குவதற்கும்,…

71 0 0