உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

ஏழு இலட்சம் ரூபா பெறுமதியுள்ள போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

சுமார் 7 இலட்சம் ரூபா பெறுமதியுடைய போதை மாத்திரைகளை கடத்திச் சென்ற நபர் ஒருவர் காலியில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்று கொஸ்கொட பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊரகஸ்மங்ஹந்திய யுத்தபிட்டிய விளையாட்டு மைதானத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அவர் சிக்கியுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் ஊரகஸ்மங்ஹந்திய, கைலத்த பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 1,340 போதை மாத்திரைகள் அடங்கிய பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை ஊரகஸ்மங்ஹந்தியிலிருந்து கொஸ்கொட நோக்கி விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்டவை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் ஒரு போதை மாத்திரையை 500 ரூபா விலையில் விற்பனை செய்து வந்ததாகவும், கைப்பற்றப்பட்ட மொத்த மாத்திரைகளின் பெறுமதி சுமார் 6 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா (கிட்டத்தட்ட 7 இலட்சம்) என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

55 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

27 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

50 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொது நிகழ்வுகளில் ஒளிப் பயன்பாடு குறித்து முக்கிய தீர்மானம்!

திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக நியமத்துணைவிதிகளை உருவாக்குவதற்கும்,…

71 0 0