உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மட்டக்களப்பில் விசேட தேவையுடையோருக்கான சேவை மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
34 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட தேவையுடைய நபர்களை உள்ளடக்கிய சேவை வழங்கலை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற மாவட்ட மட்ட கலந்துரையாடல் இன்று (27.02.2026) மட்டக்களப்பு நகர மண்டபத்தில், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் தலைமையில் நடைபெற்றது.


இக்கலந்துரையாடலில் விசேட தேவையுடையோர் தொடர்பான பாராளுமன்ற ஒன்றியத் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். நாடு முழுவதும் விசேட தேவையுடைய நபர்களின் உரிமைகள், தேவைகள் மற்றும் எதிர்நோக்கும் சவால்களை ஆராய்ந்து, அவற்றுக்கான தீர்வுகளை முன்வைப்பதற்காக இந்த மாவட்ட குழு அமைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அரசாங்கம் விசேட தேவையுடையோரின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும், இதன் தொடர்ச்சியாக நாடளாவிய ரீதியில் மூன்றாவது மாவட்டமாக மட்டக்களப்பில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டது. மாவட்டத்தில் சுமார் 9,000க்கும் மேற்பட்ட விசேட தேவையுடையோர் இருப்பதுடன், 14 சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.


இக்கூட்டத்தில் விசேட தேவையுடையோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் நேரடியாக கேட்டு அறியப்பட்டதுடன், கல்வி, போக்குவரத்து வசதிகள், பரீட்சை முறைகள், விசேட வினாத்தாள் தயாரித்தல், பல்கலைக்கழகங்களில் சிறப்பு கல்வி வாய்ப்புகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

விசேட தேவையுடையோர் மனித நேய அடிப்படையில் சமூகத்தில் முழுமையாக இணைந்து வாழும் சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர், சமூக சேவை உத்தியோகத்தர்கள், அரச உயர் அதிகாரிகள், துறைத் தலைவர்கள், பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

24 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

45 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொது நிகழ்வுகளில் ஒளிப் பயன்பாடு குறித்து முக்கிய தீர்மானம்!

திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக நியமத்துணைவிதிகளை உருவாக்குவதற்கும்,…

68 0 0
இலங்கை செய்திகள்

வடக்குக்கு முதலீட்டாளர்கள் வரும்போது நிர்வாகத் தடைகள் காரணமாக திரும்பிச் செல்லக்கூடாது.!

வடக்கு மாகாணத்துக்கு முதலீட்டாளர்கள் வருகை தரும்போது, நிர்வாகத் தடைகள் காரணமாக விரக்தியடைந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்படக் கூடாது. சட்டரீதியாக அனுமதிக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்களுக்கு உரிய அனுமதிகளை…

52 0 0