‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு விசேட புலமைப்பரிசில் திட்டம்.!
‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு பொருளாதார நிவாரணம் வழங்கும் நோக்கில் விசேட புலமைப்பரிசில் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லலித் அத்துலத்முதலி மகாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் அறக்கட்டளை நிதியம் அறங்காவலர் சபையினால் ஒருமுறை வழங்கப்படும் இந்த விசேட புலமைப்பரிசில் திட்டத்தை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் இறுதியில் நாட்டைத் தாக்கிய ‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்திற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.விண்ணப்பப் படிவங்களை www.mahapola.lk என்ற மகாபொல இணையதளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.