மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!
2026ஆம் ஆண்டிற்காக தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 3,000 ரூபா பெறுமதியான பாதணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இவ் வவுச்சர்கள் 2026.02.28 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், மாணவர்கள் பயனடையும் வகையில் அதன் செல்லுபடியாகும் காலத்தை மார்ச் 15ஆம் திகதி வரை நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதனால், இதுவரை வவுச்சர்களைப் பயன்படுத்தாத மாணவர்கள் மார்ச் 15ஆம் திகதிக்குள் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.