சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக ஒளி பரப்பிய ஞானசுடர் வெளியீடு.!
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் மாதாந்தம் வெளியிடப்படும் “ஞானசுடர்” ஆன்மீக மலரின் 338ஆவது இதழ் வெளியீடு இன்று காலை சந்நிதியான் ஆச்சிரமத்தில் நடைபெற்றது.
ஆச்சிரமத்தின் முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வெளியீட்டுரையை சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி சிந்துரா கலியுகவரதன் ஆற்றியதுடன், மதிப்பீட்டுரையை ஓய்வுநிலை ஆசிரியர் திருமதி புனிதவதி சண்முகலிங்கம் நிகழ்த்தினார்.
தொடர்ந்து சிறப்பு பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.இதேவேளை, 2025ஆம் ஆண்டு “ஞானசுடர்” மலருக்காக வாசகர்களிடையே நடத்தப்பட்ட போட்டியில் பங்கேற்று வெற்றியடைந்தவர்களுக்கு முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களுக்கான பரிசுகளும், 10 ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள், ஆச்சிரமத் தொண்டர்கள் மற்றும் அடியவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.