உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் குழு தலைவர் பொடி லஸ்ஸி.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

பாதாள உலகக் குழு உறுப்பினரும் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘பொடி லஸ்ஸி’ எனப்படும் அருமஹந்தி ஜனித் மதுசங்க டி சில்வா, இன்று அதிகாலை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இலங்கை மற்றும் இந்திய இராஜதந்திர மட்டத்திலான பேச்சுகள் மற்றும் சர்வதேச பொலிஸாரின் (ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பயனாக, இந்தியாவில் அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 05.55 மணியளவில் மும்பையிலிருந்து வருகை தந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL – 142 விமானம் மூலம் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அங்கு விசேட பொலிஸ் குழுவினரால் பொறுப்பேற்கப்பட்ட அவர், பலத்த பாதுகாப்புடன் மேலதிக விசாரணைகளுக்காக எல்பிட்டிய பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளின் கீழ் இலங்கையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொடி லஸ்ஸி, கடந்த 2024 டிசம்பர் 9 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளிவந்த பின்னர், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்து கடல் வழியாகச் சட்டவிரோதமாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.

இதனைத் தொடர்ந்து, போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இந்தியாவிலிருந்து வெளியேற முயன்றபோது, 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மும்பையில் வைத்து இந்தியப் பாதுகாப்புப் படையினரால் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்குக்கு முதலீட்டாளர்கள் வரும்போது நிர்வாகத் தடைகள் காரணமாக திரும்பிச் செல்லக்கூடாது.!

வடக்கு மாகாணத்துக்கு முதலீட்டாளர்கள் வருகை தரும்போது, நிர்வாகத் தடைகள் காரணமாக விரக்தியடைந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்படக் கூடாது. சட்டரீதியாக அனுமதிக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்களுக்கு உரிய அனுமதிகளை…

47 0 0
இலங்கை செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் திறந்து வைப்பு.!

மன்னார் நலன்புரி சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் நிதியுதவியுடன் மூன்றாவது மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் மடு பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. மன்னார் நலன்புரி…

57 0 0
இலங்கை செய்திகள்

ஓ.எம்.பி. நிகழ்வைக் கண்டித்து யாழில் போராட்டம்; பொலிஸார் குவிக்கப்பட்டு அராஜகம் அரங்கேற்றம்.!

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் எனவும், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? எனக் கோரியும் வடக்கு…

72 0 0
இலங்கை செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்.!

இன்றைய தினம் (25) ஹட்டன், நோட்டன், கினிக்கத்தேன, வட்டவளை, மஸ்கெலியா. சாமிமலை, நோர்வூட், டிக்கோயா, நல்லதண்ணி, கொட்டகலை, தலவாக்கலை, மெராயா, லிந்துல, அக்கரபத்தனை, பசுமலை, நானுஓயா, நுவரெலியா…

57 0 0