உயர் தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர் தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளை இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கமைய, தொழில்நுட்பப் பாடங்களில் உள்ள பொறிமுறைகள் தொழில்நுட்பப் பாடத்திற்கான செய்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் மார்ச் 6 ஆம் திகதி முதல் மார்ச் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
மேலும், கலைத் துறையைச் சார்ந்த நாட்டியம் (தேசிய மற்றும் பரதம்), சங்கீதம் (கீழைத்தேய மற்றும் மேலைத்தேய), நாடகமும் அரங்கியலும் (சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம்) ஆகிய பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் மார்ச் 9 ஆம் திகதி முதல் மார்ச் 16 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
இது தொடர்பான மேலதிக விபரங்களும் அறிவுறுத்தல்களும் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆவணத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.