உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

லண்டனில் நாமலுக்கு விழுந்தது சர்வதேச அடி.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
21 பார்வைகள்

லண்டனுக்கு விஜயம் செய்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் உரைகள் அடுத்தடுத்து இரத்துச் செய்யப்பட்டமையானது, கடந்த காலங்களில் ராஜபக்ஷ குடும்பத்தினர் முன்னெடுத்த அரசியலுக்கு சர்வதேச சமூகம் வழங்கிய பதிலடி என்று நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
“நாமல் ராஜபக்ஷ போன்றவர்கள் இலங்கையில் எத்தகைய அரசியலை முன்னெடுத்தார்கள் என்பதை உலகம் இன்று நன்கு அறிந்து வைத்துள்ளது. சர்வதேச சமூகம் இப்போது மிகவும் விழிப்புடன் இருக்கின்றது. அதன் விளைவாகவே, கேம்பிரிட்ஜ் மற்றும் ஒக்ஸ்போர்ட் போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் அவருக்கு இடமளிக்க மறுத்துள்ளன.

ராஜபக்ஷக்களின் ஆட்சிக்காலத்தில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் கையாளப்பட்ட விதம் குறித்து சர்வதேச மாணவர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் மத்தியில் பாரிய விரக்தி நிலவுகின்றது. இந்த அதிருப்தியே நாமலின் உரைகள் இரத்துச் செய்யப்பட்டமைக்குப் பிரதான காரணமாகும்.

கேள்விகளுக்குப் பயப்படுபவர்கள் அல்லது மற்றவர்கள் கேள்வி கேட்கும் சூழலை உருவாக்காதவர்கள், இத்தகைய உயரிய கல்வி நிறுவனங்களில் உரையாற்றத் தகுதியற்றவர்கள். ஒரு ஜனநாயக நாட்டில் இது போன்ற எதிர்ப்புகள் எழும்போது, அந்த நாட்டு கல்வி நிறுவனங்கள் அதற்கு மதிப்பளிப்பது இயல்பான ஒன்றாகும்.

லண்டன் பல்கலைக்கழக மாணவர்கள் தமது பாதுகாப்பு மற்றும் சுதந்திரமான விவாதம் குறித்து கவலை தெரிவித்தது முற்றிலும் நியாயமானது. கடந்த கால கசப்பான அனுபவங்களே இத்தகைய போராட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

49 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

26 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

56 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

53 0 0