கொட்டகலை சிவானந்த நலன்புரி நிலையத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா.!
இராமகிருஷ்ண மிஷனின் கொட்டகலை சிவானந்த நலன்புரி நிலையத்தின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் இராஜமணி பிரசாந்த் கலந்து கொண்டதுடன், ஆன்மீகத் தலைவர்களால் அவருக்கான நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.
கொட்டகலை பிரதேசத்தில் மிஷன் முன்னெடுத்து வரும் ஆன்மீக, சமூக மேம்பாட்டுப் பணிகள் தொடர்பில் வாழ்த்துகளை தெரிவித்ததோடு எதிர்காலப் பணிகளுக்கான பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
