உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

கொட்டகலையில் நிவாரணப் பொதிகள் வழங்கும் நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
25 பார்வைகள்

கொட்டகலையில் நிவாரணப் பொதிகள் வழங்கும் விசேட நிகழ்வு கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர் திரு.புஸ்பா விஸ்வநாதன் தலைமையில் இடம்பெற்றது.

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் பூரண அனுசரணையில், கொட்டகலை பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் சுவாமி தேவஸ்தான கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளரும், அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவருமான அதி வணக்கத்திற்குரிய பிதா அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்ணான்டோ கலந்துகொண்டு பயனாளிகளுக்கு பொதிகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வு கொட்டகலை பிரதேச சபை உறுப்பினரும் கொட்டகலை நகர் ஐக்கிய வர்த்தக சங்கத்தின் தலைவருமான கௌரவ விஸ்வநாதன் புஸ்பா அவர்களின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் நுவரெலியா தமிழ் இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சியோடு, திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அரச உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள் மற்றும் அதிபர், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

42 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

65 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தொகை சீன சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!

சுமார் 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச்…

52 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்.!

உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில், இலங்கை…

53 0 0