யாழில் இடம்பெற்ற கோர விபத்து.!
யாழ்ப்பாணம் – தென்மராட்சி கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் உள்ள எருவன் பிள்ளையார் வளைவுப் பகுதியில் நேற்று இரவு 9.15 மணியளவில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மகிழுந்து ஒன்று கொடிகாமத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த வேளையில் எருவன் பிள்ளையார் கோவில் பகுதியில் மின்கம்பத்துடன் மோதியே இவ் விபத்து சம்பவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் மகிழுந்து சேதத்துக்குள்ளாகியுள்ள நிலையில் மகிழுந்தில் பயணித்த எவருக்கும் தெய்வாதீனமாக எந்தவித ஆபத்துக்களும் ஏற்படவில்லை.
மின்கம்பத்துடன் மோதி விபத்து ஏற்பட்டதால் மின்கம்பம் சேதமடைந்த நிலையில் வரணிப் பகுதிக்கான மின்சாரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்.
