உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

கோவில்போரதீவு கண்ணகி அறநெறிப் பாடசாலையின் பொங்கல் விழா.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
19 பார்வைகள்

மட்டக்களப்பு, கோவில்போரதீவு கண்ணகி அறநெறிப் பாடசாலையின் பொங்கல் விழாவானது இன்று ஞாயிற்றுக்கிழமை பக்திபூர்வமாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது.

இன்றைய தினம் காலை ஸ்ரீ மீனாட்சி கட்டுப்பிள்ளையார் ஆலயத்தில் ஆலய அர்ச்சகர்களினால் விசேட பூஜைகள் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க, ஆலய முன்றலில் பொங்கல் பானை வைக்கப்பட்டு பொங்கல் விழா இனிதே ஆரம்பமானது.

பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, ஸ்ரீ மீனாட்சி கட்டுப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாணவர்களின் பல்வேறு கலை, கலாச்சார நிகழ்வுகள் அடங்கிய ஊர்வலம் ஆரம்பமானது.

கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இவ் ஊர்வலம், கோவில்போரதீவு உதயதாரகை கலை விளையாட்டுக் கழக மைதானத்தை சென்றடைந்தது.

அதனைத் தொடர்ந்து மைதானத்தில் அறநெறிப் பாடசாலையின் பொறுப்பாசிரியர் டெ.ரேணுகா தலைமையில் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந் நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச சபையின் கோவில்போரதீவு வட்டார உறுப்பினர் மகேஸ்பரன் கோபிநாத் அவர்கள் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டார்.

மதகுருமார்கள், ஆலய அறங்காவலர் சபையினர் மற்றும் ஆசிரியர்கள், அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், கிராம மூத்த உறுப்பினர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், கலாச்சார உத்தியோகத்தர், விளையாட்டுக் கழக தலைவர், கிராம பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்ட இந் நிகழ்வில், அதிதிகளின் உரைகளும் மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின.

நிகழ்வின் நிறைவில், கலை நிகழ்வுகளில் பங்குபற்றிய மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்குப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0