சிறப்பாக இடம்பெற்ற வேலாயுதம் மகா வித்தியாலய விளையாட்டுப் போட்டி.!
யாழ்ப்பானம் வடமராட்சி பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி பாடசாலை அதிபர் t.செந்தில்நாதன் தலைமையில் பாடசாலை மைதானத்தில் நேற்று பிற்பகல் 1:30 மணியளவில் ஆரம்பமானது.
இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு மேலைத்தேய இசை முழங்க வரவேற்கப்பட்டு மங்கள சுடர்கள் ஏற்றப்பட்டு விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள், பதக்கங்கள், சான்றிதழ்களையும், கருத்துரைகளையும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட பிரபல தொழிலதிபரும் பாடசாலை பழைய மாணவருமான விஜயகுமாரன் ரகுராம், விவசாய பயிற்சி கல்லூரியின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆனந்தராசா ராகுவரன் உட்பட பலரும் வழங்கி கௌரவித்தனர்.
இந் நிகழ்வில் வேலாயுதம் மகா வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

