ஓட்டமாவடியில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வு.!
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78ஆவது சுதந்திர தின நிகழ்வு புனாணை 23 ஆவது படைப்பிரிவும் அகில இலங்கை ஜனாஷா சங்கத்தின் ஏற்பாட்டில் மூவின மாணவர்கள் பங்குபற்றுதலுடன் இன்று 04/02 ஓட்டமாவடி டைவர்ஸ் பார்க்கில் நடைபெற்றது.
இந் நிகழ்வின் ஆரம்ப வைபவமாக கிரான் மகா வித்தியாலய மாணவர்களினால் பாண்ட் (Band) வாத்தியம் இசைக்கப்பட்டு மூவின பாடசாலை மாணவர்கள் நடைபவனியாக வருகைதந்துடன் அதிதிகளும் அழைத்து வரப்பட்டதனை தொடர்ந்து 23 ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதியினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டடு தேசிய கீதம் இசைக்கப்பட்டு நாட்டுக்காக உயிர் நீத்த அனைவருக்கும் ஒரு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து சர்வமத குருமார்களின் ஆசி உரைகளும் இடம்பெற்று தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமானது. இதன்போது திடீர் மரண விசாரணை அதிகாரிகள், முதலுதவி பயிற்சியை முடித்துக் கொண்ட மாணவர்கள் மற்றும் சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் சேவையாளர்கள் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின் பிரதம அதிதியாக 23 ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் G.S.K.Perera, இலங்கை கடற்படை கட்டளை தளபதி M.G.A. குமார, இலங்கை உயிர் காப்பு சேவை பிரிவின் தலைவர் அத்துல்ல செனரொட்னா, கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி F.P.நிலங்க, திட்டமிடல் பணிப்பாளர் M.M. முபாரக், ஜமாத்துல் உலமா சபை பொருளாளர் A.இலியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



