உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

ஓட்டமாவடியில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
25 பார்வைகள்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78ஆவது சுதந்திர தின நிகழ்வு புனாணை 23 ஆவது படைப்பிரிவும் அகில இலங்கை ஜனாஷா சங்கத்தின் ஏற்பாட்டில் மூவின மாணவர்கள் பங்குபற்றுதலுடன் இன்று 04/02 ஓட்டமாவடி டைவர்ஸ் பார்க்கில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் ஆரம்ப வைபவமாக கிரான் மகா வித்தியாலய மாணவர்களினால் பாண்ட் (Band) வாத்தியம் இசைக்கப்பட்டு மூவின பாடசாலை மாணவர்கள் நடைபவனியாக வருகைதந்துடன் அதிதிகளும் அழைத்து வரப்பட்டதனை தொடர்ந்து 23 ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதியினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டடு தேசிய கீதம் இசைக்கப்பட்டு நாட்டுக்காக உயிர் நீத்த அனைவருக்கும் ஒரு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து சர்வமத குருமார்களின் ஆசி உரைகளும் இடம்பெற்று தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமானது. இதன்போது திடீர் மரண விசாரணை அதிகாரிகள், முதலுதவி பயிற்சியை முடித்துக் கொண்ட மாணவர்கள் மற்றும் சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் சேவையாளர்கள் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வின் பிரதம அதிதியாக 23 ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் G.S.K.Perera, இலங்கை கடற்படை கட்டளை தளபதி M.G.A. குமார, இலங்கை உயிர் காப்பு சேவை பிரிவின் தலைவர் அத்துல்ல செனரொட்னா, கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி F.P.நிலங்க, திட்டமிடல் பணிப்பாளர் M.M. முபாரக், ஜமாத்துல் உலமா சபை பொருளாளர் A.இலியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0