ஏறாவூர் ஜுப்ரியா வித்தியாலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வித்தியாரம்ப விழா.!
2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்று மாணவர்களை நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் இணைத்துக் கொள்ளும் செயற்திட்டதிற்கு அமைவாக ஏறாவூர் அல்-ஜுப்ரியா வித்தியாலயத்தில் வித்தியாரம்ப விழா பாடசாலையின் அதிபர் என்.எம்.மஹாத் அவர்களின் தலைமையில் இன்று (29) இடம்பெற்றது.
இந் நிகழ்வில் அதிதிகளின் உரைகளும் மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக நிஸாத் ஹாஜியார் பவுண்டேஷன் தலைவரும் பிரபல சமூக செயற்பாட்டாளரும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினருமான அல்ஹாஜ் CMM.நிஸாத் அவர்கள் கலந்து கொண்டார். கெளரவ அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்தின் ஆசிரிய ஆலோசகர்களான ALM.சில்மி, SA.றிம்சாத் மற்றும் கெளரவ அதிதிகளாக ஜுப்ரியா பாடசாலையிலிருந்து ஓய்வு பெற்றுச்சென்ற ஆசிரியைகளான திருமதி RBA மஜீத், KUA லத்தீப் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
மேலும், இந் நிகழ்வில் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள், கல்விசாரா உழியர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.



