உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

மூதூர் கிளிவெட்டி குமாரபுரம் பாலர் பாடசாலைக்கு சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
19 பார்வைகள்

புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூக மயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சுவிஸ் நாட்டில் வசிக்கு நர்மதா தினேஸ் அவர்களின் பிறந்த நாளைச் சிறப்பிக்கும் அவர்களின் நிதியுதவியின் கீழ் திருகோணமலை மூதூர் கிளிவெட்டி குமாரபுரம் கோகுலம் பாலர் பாடசாலை சிறார்களுக்கு பாடசாலை சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூக மயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தின் தலைவரும், புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான க.இன்பராசா தலைமையில் இவ்வுதவித் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் ஒன்றியத்தின் ஆலோசகர் பா.மதன், ஒன்றியத்தின் முல்லைத்தீவு மாவட்ட செயற்பாட்டாளர் சி.மதிசன், பாலர் பாடசாலை பிரதான ஆசிரியை உள்ளிட்ட மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

யுத்தத்தில் அதிகம் பாதிப்புற்ற, 1996ஆம் ஆண்டு 25க்கும் மேற்பட்ட இனப்படுகொலை இடம்பெற்றதும், பெண் தலைமைத்துவம் கொண்ட குடும்பங்களை அதிகமாகக் கொண்டதுமான கிராமமான குமாரபுரத்தில் இவ்வாறு பெண் தலைமைத்துவ குடும்ப சிறார்கள் கல்வி கற்கும் குறித்த பாலர் பாடசாலை தேர்வு செய்யப்பட்டு இவ்வுதவித் திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

எவ்வித அரசியல்வாதிகளாலும் கண்டுகொள்ளப்படாத இக்கிராம சிறார்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துள்ள முன்னாள் போராளிகளின் ஒன்றியமான புனர்வாழ்வளிக்கப்பட்ட சமூக மயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியம் மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் முன்மொழிவின் அடிப்படையில் புலம்பெயர் உறவுகளின் நிதியுதவியின் மூலம் இவ்வாறான உதவிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0