உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

வந்தாறுமூலை டைமன் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பொங்கல் விழா.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
27 பார்வைகள்

​மட்டக்களப்பு வந்தாறுமூலை டைமன் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா நிகழ்வு வந்தாறுமூலை அம்பலத்தடி சந்தியில் அமைந்துள்ள உழவர் சிலை முன்பாக கழகத் தலைவர் ம.ஐங்கரன் தலைமையில் நேற்று 24.01.2026 காலை சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது கிராம பாரம்பரிய முறைப்படி தமிழர்களின் கலாச்சார விழுமியங்களுக்கு ஏற்ப, வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டில்கள் சகிதம் பொங்கல் பானைகள், விவசாய உபகரணங்கள் என்பன உழவர் பெருமையை எடுத்தியம்பும் வண்ணம் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு வந்தாறுமூலை அம்பலத்தடி சந்தியில் அமைந்துள்ள உழவர் சிலை முன்பாக பொங்கல் பொங்கப்பட்டு சூரியபகவானுக்கு வழிபாடுகள் இடம்பெற்றது.

தொடர்ந்து மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம், வரவேற்புரை, வரவேற்பு நடனம், ஆசியுரை தலைமையுரை, அதிதிகள் உரை, விவசாயிகள் கெளரவிப்பு மற்றும் மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்ச்சிகள் என்பனவும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ. சிறிநாத் அவர்களின் பிரதான இணைப்பாளருமான த. பிரபாகரன், வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மா.ஜெயம்பலம் குருக்கள், வந்தாறுமூலை மேற்கு கிராம உத்தியோகத்தர், வந்தாறுமூலை டைமன் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், முன்னாள் கழக உறுப்பினர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், வந்தாறுமூலை மகா விஷ்ணு, நீர்முகப் பிள்ளையார் ஆலய நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் பங்கேற்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0