உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

இலங்கை கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்த சனத் ?

18 பார்வைகள்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூர்ய அடுத்த மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகும் ஐ.சி.சி டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருடன் பதவியில் இருந்து விலகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.இலங்கை கிரிக்கெட் சபை அவரது பதவியை நீடிப்பதற்கு ஆர்வம் காட்டி வரும் நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

2024 ஜூலையில் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரில் தற்காலிக பயிற்சியாளராகவே ஜயசூர்ய அழைக்கப்பட்டிருந்தார்.அந்தத் தொடரில் பல தசாப்தங்களின் பின் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி வென்றதை அடுத்தே ஜயசூர்ய இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.ஜயசூர்யவை தொடர்ந்தும் பயிற்சியாளராக தக்கவைப்பதற்கு எதிர்பார்ப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் ஷம்மி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை மகளிர் அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளர் ஒருவரை நியமிக்க இலங்கை கிரிக்கெட் சபை திட்டமிட்டிருப்பதாக சில்வா உறுதி செய்துள்ளார்.இலங்கை மகளிர் அணிக்கு தற்போது இலங்கை முன்னாள் வீரர் ருமேஷ் ரத்னாயக்க பயிற்சி அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

தொழில்முறை காற்பந்து வாழ்வுக்கு இந்த வருடத்துடன் முடிவு!

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சமீபத்திய பேட்டி கால்பந்து உலக ரசிகர்களை பெரும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமது நீண்ட கால தோழியான ஜோர்ஜினா ரோட்ரிக்ஸுடன்…

61 0 0
விளையாட்டுச் செய்திகள்

இலங்கை தொடருக்கு முன்னர் சர்ஃபராஸ் கானுக்கு முடி வெட்டிவிட்ட முகமது சிராஜ்: வைரலாகும் காணொளி

இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியக் கிரிக்கெட் அணி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் திகதி காலி…

57 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெஸ்ஸியின் மறைந்த தந்தைக்கு ரொட்ரிகோ டி போல் உருக்கமான அஞ்சலி!

ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி (Jorge Messi) காலமானதை அடுத்து, அவரது நெருங்கிய நண்பரும் சக வீரருமான ரொட்ரிகோ…

92 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் வீட்டின் மீது தாக்குதல்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் மகுரா பகுதியில் அமைந்துள்ள வீட்டின் மீது நேற்று (5) மாலை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல்…

90 0 0