அமெரிக்க கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த இலங்கை வீரர்!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறைவீரர் ஷெஹான் ஜயசூர்ய டி20 உலகக்கிண்ண தொடருக்கான அமெரிக்க அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கை அணியில் அறிமுகமான இவர் இறுதியாக கடந்த 2020ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஆடிய நிலையில் கடந்த 2021 ஜனவரியில் தனது ஓய்வை அறிவித்தார்.
பின்னர் அமெரிக்காவுக்கு குடியெர்ந்த அவர் தனது கிரிக்கெட் பயணத்தை மீண்டும் ஆரம்பித்தார். இந்நிலையில் அவர் அமெரிக்க கிரிக்கெட் அணியில் இணைந்துள்ளார். ஷெஹான் ஜயசூர்ய, இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 12 ஒருநாள் போட்டிகளிலும், 18 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.