உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

வகுப்பு தோழியை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய நபர்: தொடர்ந்த அசம்பாவிதங்கள்.!

இந்திய செய்திகள் 8 மாதங்கள் முன்
23 பார்வைகள்

கணவனைப் பிரிந்த தனது வகுப்புத் தோழியிடம், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வறுபுறுத்தியுள்ளார் ஒருவர். அந்தப் பெண் மறுக்கவே, அவரை கொலை செய்துவிட்டார் அவர்.இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள உத்தர கன்னடா என்னுமிடத்தைச் சேர்ந்த ரஞ்சிதா (Ranjitha Bhanasode, 29), கணவனைப் பிரிந்து வாழ்ந்துவந்துள்ளார்.

ரஞ்சிதாவின் வகுப்புத் தோழரான ஒருவர், அடிக்கடி அவரது வீட்டுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.ஒரு கட்டத்தில் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு அவர் ரஞ்சிதாவை வற்புறுத்த, மீண்டும் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் தனக்கு இல்லை என்று கூறியிருக்கிறார் ரஞ்சிதா.திருமணம் செய்துகொள்ளுமாறு அவர் தன்னைத் தொடர்ந்து வற்புறுத்தியதால், அவருடனான தொடர்பையே துண்டித்துள்ளார் ரஞ்சிதா.

இந்நிலையில், சனிக்கிழமையன்று பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த ரஞ்சிதாவைப் பின் தொடர்ந்த அந்த 30 வயது வகுப்புத் தோழர், ரஞ்சிதாவின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு தப்பியோடியுள்ளார்.உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார் ரஞ்சிதா.

தலைமறைவான கொலையாளியை பொலிசார் தேடிவந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று, மரங்களடர்ந்த ஒரு பகுதியில், மரம் ஒன்றில் அவரது உயிரற்ற உடல் தொங்கிக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அவர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டிருக்கலாம் என கருதப்படும் நிலையில், இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் தமிழக முதல்வருக்கும் இடையே சந்திப்பு

சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று நடைபெறவுள்ள தென் மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்குவதற்காக, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னையை வந்தடைந்தார். அதனைத்…

57 0 0
இந்திய செய்திகள்

இந்திய எல்லைகளை ஆக்கிரமிப்பதாக சீனா மீது குற்றச்சாட்டு!

இந்தியாவின் எல்லை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் எல்லை ஊடுருவல்கள் குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பதாக…

57 0 0
இந்திய செய்திகள்

தி.மு.கவின் “செயல் தலைவர்” பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கத் திட்டம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் அடுத்தகட்ட அதிகார மாற்றங்கள் குறித்தான விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. இந்தநிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் “செயல் தலைவர்” பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம்…

67 0 0
இந்திய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் பலி!

இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளதுடன், 32 பேர் காயம் அடைந்தனர். மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் வயல் வேலையில் ஈடுபட்டு…

61 0 0