சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான வாகனம்.!
கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து இன்று ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளாகியுள்ளது.
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுவாஞ்சிகுடி அற்புதப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் அமைந்திருந்த தொலைத் தொடர்பு கம்பத்தில் மோதிய பின்னர் ஆலயத்தின் மதிலிலும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் சாரதி சிறுகாயங்களுக்குள்ளான நிலையில் தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளதுடன், அவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துக்குள்ளான வாகனத்தின் முன்பகுதி பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.
களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

