உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் சீனாவின் மத்தியஸ்தக் கூற்றை நிராகரித்த இந்தியா!

இந்திய செய்திகள் 8 மாதங்கள் முன்
29 பார்வைகள்

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த இராணுவ மோதலின் போது புது டெல்லிக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ததாக சீனா தெரிவித்த கூற்றுக்களை இந்தியா உறுதியாக நிராகரித்துள்ளது.போர்நிறுத்த முடிவில் எந்த மூன்றாம் தரப்பினரும் ஈடுபடவில்லை என்பதையும் இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

மே 10 அன்று ஆப்ரேஷன் சிந்தூரை தொடர்ந்து, இரு நாடுகளின் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் இடையேயான நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து போர்நிறுத்தம் எட்டப்பட்டது என்பதை இந்தியா தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது.

இந்த நிலையில், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, டொனால்ட் ட்ரம்பைப் போல நடந்து கொண்டு, மே மாதம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் உட்பட பல உலகளாவிய மோதல்களுக்கு பெய்ஜிங் மத்தியஸ்தம் செய்ததாகக் கூறியதைத் தொடர்ந்து இந்தியாவின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

மத்தியஸ்தம் தொடர்பில் செவ்வாயன்று (30) நடந்த ஒரு நிகழ்வில் பேசிய சீன வெளிவிவகார அமைச்சர், இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு உள்ளூர் போர்களும் எல்லை தாண்டிய மோதல்களும் அதிகமாக வெடித்தன.

நீடித்த அமைதியைக் கட்டியெழுப்பும் முயற்சியில், சீனா ஒரு புறநிலை மற்றும் நடுநிலை நிலைப்பாட்டை எடுத்துள்ளது.அதேநேரத்தில் போருக்கான அறிகுறிகள் மற்றும் மூல காரணங்கள் இரண்டையும் நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்துகிறது.

சூடான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான இந்த சீன அணுகுமுறையைப் பின்பற்றி, வடக்கு மியான்மர், ஈரானிய அணுசக்தி பிரச்சினை, பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பதட்டங்கள், பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பிரச்சினைகள் மற்றும் கம்போடியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையிலான அண்மைய மோதல் ஆகியவற்றில் நாங்கள் மத்தியஸ்தம் செய்தோம் – என்று கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் தமிழக முதல்வருக்கும் இடையே சந்திப்பு

சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று நடைபெறவுள்ள தென் மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்குவதற்காக, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னையை வந்தடைந்தார். அதனைத்…

57 0 0
இந்திய செய்திகள்

இந்திய எல்லைகளை ஆக்கிரமிப்பதாக சீனா மீது குற்றச்சாட்டு!

இந்தியாவின் எல்லை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் எல்லை ஊடுருவல்கள் குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பதாக…

57 0 0
இந்திய செய்திகள்

தி.மு.கவின் “செயல் தலைவர்” பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கத் திட்டம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் அடுத்தகட்ட அதிகார மாற்றங்கள் குறித்தான விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. இந்தநிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் “செயல் தலைவர்” பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம்…

67 0 0
இந்திய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் பலி!

இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளதுடன், 32 பேர் காயம் அடைந்தனர். மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் வயல் வேலையில் ஈடுபட்டு…

61 0 0