உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

தாயை தாக்கி விட்டு வீதியில் வைத்து கடத்தப்பட்ட மாணவி

க்ரைம் ஸ்டோரி 3 ஆண்டுகள் முன்
24 பார்வைகள்

தனியார் வகுப்புக்குச் சென்றுவிட்டு தாயுடன் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த மாணவி ஒருவர், தனது காதலன் என கூறிக்கொண்ட இளைஞனால் கடத்திச் செல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்துகம பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றாதாகவும், கடத்தப்பட்ட மாணவியின் தாயை தாக்கி விட்டே மாணவியைக் கடத்தி சென்றதாக முறைப்பாடு செய்துள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொரணை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி, மத்துகம பிரதேசத்தில் உள்ள தனியார் வகுப்புக்கு ஒன்றுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது , முச்சக்கரவண்டியில் மற்றுமொரு நபருடன் வந்த சந்தேக நபர் மாணவியை கடத்திச் சென்றதாக அவரின் தாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

மாணவி கடத்தப்பட்ட முச்சக்கரவண்டியில் தாய் ஏற முற்பட்டதையடுத்து சந்தேகநபர் அவரை உதைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதேசமயம் சந்தேக நபர் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

க்ரைம் ஸ்டோரி

ஓய்வை அறிவித்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கெப்டன்.!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், விக்கெட் கீப்பர் பெட்ஸ்மேனுமான சர்பராஸ் கான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.இவரது தலைமையில் பாகிஸ்தான் அணி இரண்டு ஐசிசி கோப்பைகளை…

33 0 0
க்ரைம் ஸ்டோரி

தேசிய வைத்திய சாலையில் காபனீரொட்சைட் வாயு செலுத்தப்பட்டு பெண் உயிரிழப்பு!

அதிக அளவு காபனீரொட்சைட் வாயுவை செலுத்தியதன் காரணமாக பெண் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளரிடம், சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன…

21 0 0
க்ரைம் ஸ்டோரி

பாலியல் ரீதியிலான செயற்பாடுகளை வீடியோ எடுத்து இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்த இளம் தம்பதியினர் கைது

பாலியல் ரீதியிலான செயற்பாடுகளை வீடியோ எடுத்து இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்த இளம் தம்பதி ஒன்று ராகம பிரதேசத்தில் பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்…

22 0 0
க்ரைம் ஸ்டோரி

திருடப்பட்ட 19 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸார் மீட்பு

நுகேகொடையில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையைத் தொடர்ந்து பல்வேறு இடங்களிலிலிருந்து குறித்த மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபர் ஒருவரின் கைது மூலம் குறித்த மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டதோடு,…

25 0 0