உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

மூன்று பிள்ளைகளை தாய் மண்ணிற்கு விதையாக்கிய தாய் ஒருவரிற்கு நேர்ந்த அவலம்!

கிளிநொச்சி செய்திகள் 3 ஆண்டுகள் முன்
27 பார்வைகள்
மூன்று பிள்ளைகளை தமிழர் தாயகம் காக்க அர்பணித்த தாயின் இன்றய நிலைமை வெட்கி தலை குனிய வேண்டும் எம் தமிழினம் என கிளிநொச்சியில் இடம்பெற்ற சம்பவம் குறித்து முகநூல்வாசி ஒருவர் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த தாய் போன்றவர்களுக்கு பாவம் செய்தால் நாங்கள் ஆறு அறிவுள்ள மனிதர்களாக இருக்க முடியாது எனவும் அவர் இடித்துரைத்துள்ளார்.

சம்பவம் குறித்து அவர் தனது பதிவில்,

கிளிநொச்சி பிரதேச சபை தரங்கெட்ட நிர்வாக தலைமையில் இயங்குகிறதா என்ற சந்தேகத்தை இந்த சம்பவம் உருவாக்கியுள்ளது. கிளிநொச்சி முருகன் ஆலையத்திற்கு முன்னால் வீதியோரமாக வியாபாரம் செய்து வரும் இவர் மூண்று மாவீரர்களின் தாய் என என்னிடம் தன்னை பல தடவை வீரமாக அடையாளப்படுத்துவார்.

மூன்று பிள்ளைகளை தாய் மண்ணிற்கு விதையாக்கிய தாய் ஒருவரிற்கு நேர்ந்த அவலம்!
மூன்று பிள்ளைகளை தாய் மண்ணிற்கு விதையாக்கிய தாய் ஒருவரிற்கு நேர்ந்த அவலம்!

இன்று வீதியில் செல்லும் அனைவரிடமும் கை ஏந்தி என்னுடைய கடையை உடைக்க வேண்டாம் என சொல்லுங்கள் “ என்று அழுது புலம்புகிறார் காரணம் அது கிளிநொச்சி பிரதேச்சபைக்கான இடம் என்பதால் உடைத்து எறிகிறார்கள்.

7-10 பிரதேசபை ஊழியர்கள் 4-6 பொலிசார் ஒரு கிராம சேவகர் இனைந்து இதை செய்ய வேண்டும் என்பதற்கு என்ன அவசரம் ? 2017 ற்கு பின் கிளிநொச்சி நகரில் என்ன அபிவிருத்தி நடந்தது எற்று அவர்களிடம் கேட்டால் அவர்களை செருப்பால் அடித்தது போல் இருக்கும் அதனால் அதை விடுவோம்.

பல வியாபார நிலையங்கள் எந்த நிலைமையில் உள்ளது அதற்கான பதிவு பத்திரங்கள் நேர்த்தியாக உள்ளதா என்று உங்களுக்கு நல்லாவே தெரியும் பணம் பலம் ஆள் பலம் உள்ளவர்களிடம் பதுங்கி பம்முவதும் ஏழைகளிடம் சீறி பாய்வதும் உங்கள் கேவலமான ஆளுமையை அப்பட்டமாக காட்டுகிறது.

அந்த தாயின் மூண்று மாவீரரும் உயிருடன் இருந்திருந்தால் இன்று கடையை உடைத்த உங்களின் நிலமை கவலைக்கிடமாக மாறி இருக்கும் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

கிளிநொச்சி செய்திகள்

பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்கி சட்டவிரோத மணலை கொண்டு செல்ல முற்பட்ட நபர்கள் கைது.!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட A9 பிரதான வீதியில் பரந்தன் பகுதியில் காணப்படுகின்ற வீதிச் சோதனை சாவடியில் இன்று 19.08.2026 பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்கி சட்டவிரோத மணலை…

109 0 0
கிளிநொச்சி செய்திகள்

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் பதிவுகளை மேற்கொண்ட 50 பேருக்கான பூர்வாங்க விசாரணை.!

கிளிநொச்சி காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் மேலும் பதிவுகளை மேற்கொண்ட 50 பேருக்கான பூர்வாங்க விசாரணை கிளிநொச்சி மாவட்ட காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில்…

62 0 0
கிளிநொச்சி செய்திகள்

சேவைச் சந்தை வர்த்தகர்களுக்கான நிதியியல் அறிவு பற்றிய கலந்துரையாடல்.!

கிளிநொச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட சேவைச் சந்தை வர்த்தகர்களுக்கு நிதியியல் அறிவு தொடர்பான கருத்தமர்வு ஒன்று இன்று பிற்பகல் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் தவிசாளர்…

75 0 0
கிளிநொச்சி செய்திகள்

பூநகரியில் காற்றாலை அமைக்கும் திட்டம்; பாதிக்கப்படும் பகுதிகளை பார்வையிட்ட சிறீதரன் எம்.பி.!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பூநகரிப் பகுதியில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து மேற்கொள்ளப்படவுள்ள காற்றாலைத் திட்டத்திற்காகக் கிராஞ்சியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களை நேரில் சென்று…

49 0 0