உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
19 சனி

நீண்ட நாட்களாக பொலிசாரால் தேடப்பட்டு வந்த நபர் போ@தைப் பொருளுடன் கைது!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
24 பார்வைகள்

நீண்ட காலமாகப் பொலிஸாரை ஏமாற்றி வந்த சந்தேக நபர் ஒருவர், வேன் ஒன்றில் பெருந்தொகையான ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் பணத்தைக் கடத்திச் சென்ற போது சம்மாந்துறை பொலிஸாரினால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் நேற்று (18) மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இக் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்மாந்துறைப் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சந்தேக நபரே, அல் முனீர் வீதியில் வைத்து அவர் பயணித்த வேனுடன் பொலிஸாரினால் வளைத்துப் பிடிக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து பெருந்தொகையான ‘ஐஸ்’ போதைப்பொருளும், போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பணத்தொகையும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனரத்ன, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல ஆகியோரின் உத்தரவின் பேரில், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் வழிநடத்தலிலும், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் அவர்களின் நெறிப்படுத்தலிலும் இச் சோதனை நடத்தப்பட்டது.

சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனையின் பேரில், ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி என். றிபாய்டீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இக் கைது நடவடிக்கையை வெற்றிகரமாகச் செயற்படுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண சுகாதார சேவையின் நடைமுறைச் சவால்கள் குறித்து அமைச்சர் மற்றும் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்!

வடக்கு மாகாண சுகாதார சேவையின் நடைமுறைச் சவால்கள், மருத்துவமனைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் மாகாண சுகாதாரத்துறையை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை…

23 0 0
இலங்கை செய்திகள்

வீதியோரங்களில் மீன் விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

பொது வீதியோரங்களில் சட்டவிரோதமான முறையில் மீன் விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு எதிராக எவ்வித சமரசமுமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சுகாதார அதிகாரிகளால் இறுதி எச்சரிக்கை…

20 0 0
இலங்கை செய்திகள்

நாவிதன்வெளியில் வர்த்தகர்களுக்கான விசேட நுகர்வோர் விழிப்புணர்வுக் கருத்தரங்கு!

நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில், பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களுக்கான விசேட நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று சுப மங்கள மண்டபத்தில் நடைபெற்றது. நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள…

29 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனை விடுதலை செய்யக் கோரி, இந்து அமைப்புகளின் கூட்டமைப்பின் சார்பில் கவனயீர்ப்புப் போராட்டம்!

சவூதி நாட்டின் சிறையில் வாடும் இலங்கை மைந்தன் சிவராசா அனோஜனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் கவனயீர்ப்பு நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.…

10 0 0