அனோஜனை விடுதலை செய்யக் கோரி, இந்து அமைப்புகளின் கூட்டமைப்பின் சார்பில் கவனயீர்ப்புப் போராட்டம்!
சவூதி நாட்டின் சிறையில் வாடும் இலங்கை மைந்தன் சிவராசா அனோஜனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் கவனயீர்ப்பு நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், சிவராசா அனோஜனின் புகைப்படம் தாங்கிய பதாகைகளையும், கோரிக்கை வாசகங்கள் தாங்கிய அட்டைகளையும் ஏந்தி நின்று தங்களது கோரிக்கையை வெளிப்படுத்தினர்.
நிகழ்வின் போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பேச்சாளர்,
இரு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
எனவே, சிவராசா அனோஜனை விடுதலை செய்து அவரது குடும்பங்கள் நலமாக வாழ சவூதி அரேபிய அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.
இதேவேளை கவன ஈர்ப்பு நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு மதுபோதையில் வந்த ஒருவர் அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் ஈடுபட்டார்.
முச்சக்கர வண்டியொன்றில் வந்த நபர் குறித்த பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்;ட நிலையில் அங்கிருந்துசென்றார்.








