யாழில் பொலிஸார் மறித்ததும் நிலத்தில் விழுந்து உ**யிரிழந்த இளைஞன்.!
இன்று காலை மானிப்பாய் பொலிஸார் வீதியில் சென்ற உந்துருளியை வழிமறித்த வேளை, உந்துருளியில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதன்போது சபாபதிப்பிள்ளை வீதி, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த தபேந்திரன் தினுசன் (வயது 26) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞன் இன்றையதினம் யாழ்ப்பாணம் – காரைநகர் வீதியில், மானிப்பாய் தேவாலயத்திற்கு முன்பாக உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த போது போக்குவரத்து பொலிஸார் அவரை வழிமறித்தனர்.
இதன்போது குறித்த இளைஞர் உந்துருளியை ஓரமாக நிறுத்திய பின்னர் தானாகவே கீழே சரிந்து விழுந்தார். பின்னர் அந்த இடத்திலேயே அசைவற்று காணப்பட்டார்.
அதன்பின்னர் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலமானது உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


