உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
19 சனி

யாழில் பொலிஸார் மறித்ததும் நிலத்தில் விழுந்து உ**யிரிழந்த இளைஞன்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
26 பார்வைகள்

இன்று காலை மானிப்பாய் பொலிஸார் வீதியில் சென்ற உந்துருளியை வழிமறித்த வேளை, உந்துருளியில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இதன்போது சபாபதிப்பிள்ளை வீதி, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த தபேந்திரன் தினுசன் (வயது 26) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞன் இன்றையதினம் யாழ்ப்பாணம் – காரைநகர் வீதியில், மானிப்பாய் தேவாலயத்திற்கு முன்பாக உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த போது போக்குவரத்து பொலிஸார் அவரை வழிமறித்தனர்.

இதன்போது குறித்த இளைஞர் உந்துருளியை ஓரமாக நிறுத்திய பின்னர் தானாகவே கீழே சரிந்து விழுந்தார். பின்னர் அந்த இடத்திலேயே அசைவற்று காணப்பட்டார்.

அதன்பின்னர் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலமானது உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசாங்கத்தின் ஊழல், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு முழுமையாக ஆதரவு.!

அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு முழுமையாக ஆதரவளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நிகழ்வொன்றின் பின்பு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே…

16 0 0
இலங்கை செய்திகள்

கரைச்சி பிரதேச சபை உள்ளூராட்சி வாரத்தின் இறுதி நாள் நிகழ்வு.!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை உள்ளூராட்சி வாரத்தின் இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது. கரைச்சி பிரதேச…

19 0 0
இலங்கை செய்திகள்

22 ஆவது திருத்தத்துக்கு எதிராக 24 ஆம் திகதி ஒன்றிணையுங்கள்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தம் ஊடாக ஜனாதிபதியும் அரசாங்கத்தின் பெரும்பான்மையும் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை மீறுவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசின் ஜனநாயக விரோத போக்கைத்…

27 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனை விடுவிக்க ஜனாதிபதி நேரடியாக தலையிட வேண்டும்.!

சவூதி அரேபியாவில் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன், நபிகள் நாயகம் (ஸல்) தொடர்பில் தான் வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்பு கோரியுள்ள நிலையில், இந்த விடயத்தை…

34 0 0