உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
19 சனி

சஹ்ரானை நான் கண்டதுமில்லை; பேசியதுமில்லை.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
23 பார்வைகள்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அண்மையில் வெளியாகி வரும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், “சஹ்ரான் என்ற பயங்கரவாதியை நான் கண்டதுமில்லை; அவருடன் பேசியதுமில்லை” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நிந்தவூரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிசாட் மேலும் தெரிவித்ததாவது:

“ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. சஹ்ரானின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு முஸ்லிம் சமூகமோ, முஸ்லிம் அரசியல் தலைமைகளோ ஒருபோதும் ஆதரவாக இருந்ததில்லை.”

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக முஸ்லிம் சமூகமும் தொடர்ச்சியாக தனது ஆதரவை வழங்கி வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சஹ்ரானின் பயங்கரவாத நடவடிக்கைகளால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். அரசியல்வாதியாக நானும் அதனால் பாதிக்கப்பட்ட ஒருவராக இருக்கின்றேன்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவும் அரசியல் கட்சியின் தலைவராகவும் இருந்த என்னை, சபாநாயகருக்குக் கூட அறிவிக்காமல் இரவோடு இரவாக கைது செய்து சிறையில் அடைத்தனர் என ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

தனக்கும் தனது கட்சிக்கும் எதிராக முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் ஒருவர் முன்வைத்துள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் ரிஷாட் பதியுதீன் கடுமையாக நிராகரித்தார்.

எனக்கு எதிராக அரசியல் நோக்கத்துடன் செயற்படுகின்ற முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் ஒருவர் முன்வைத்துள்ள கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு பல தமிழ் ஊடகங்கள் தங்களுக்கு விருப்பமான முறையில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

சஹ்ரானை நான் கண்டதுமில்லை; அவருடன் பேசியதுமில்லை. எந்தவிதமான தொடர்பும் எனக்கு இல்லை.

எனவே, இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நான் தயங்கப் போவதில்லை” என அவர் தெரிவித்தார்.

அதேவேளை, ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்க வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இந்த விடயத்தில் நேர்மையான, சுயாதீனமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். உண்மை வெளிவர வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

அதற்காக முன்னெடுக்கப்படும் முறையான விசாரணைகளுக்கு எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு எந்த நேரத்திலும் தயாராக இருக்கின்றோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பாக வெளிவிவகார அமைச்சருடன் பேசுவதற்கு தாம் முயற்சித்ததாகவும் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சருடன் பேசுவதற்கு நான் தொடர்புகொண்டேன். ஆனால் அவர் வெளிநாட்டில் இருப்பதால் தொடர்புகொள்ள முடியவில்லை. இந்த விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜனை விடுவிக்க ஜனாதிபதி நேரடியாக தலையிட வேண்டும்.!

சவூதி அரேபியாவில் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன், நபிகள் நாயகம் (ஸல்) தொடர்பில் தான் வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்பு கோரியுள்ள நிலையில், இந்த விடயத்தை…

23 0 0
இலங்கை செய்திகள்

பசிலைக் கண்டறிய சர்வதேச பொலிஸாரின் நீல அறிவித்தல்.!

மாத்தறை பிரவுன்ஸ்ஹில் காணி கொள்வனவு மற்றும் ஊவா மாகாண சபைத் தேர்தல் காலப்பகுதியில் சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் 7.8 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்தி 12 ஆயிரம்…

12 0 0
இலங்கை செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கரவண்டி.!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் சென்ஜோன் டிலரி பகுதியில் 50அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.…

11 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பொலிஸார் மறித்ததும் நிலத்தில் விழுந்து உ**யிரிழந்த இளைஞன்.!

இன்று காலை மானிப்பாய் பொலிஸார் வீதியில் சென்ற உந்துருளியை வழிமறித்த வேளை, உந்துருளியில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இதன்போது சபாபதிப்பிள்ளை வீதி,…

24 0 0