உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
15 செவ்வாய்

மஹிந்தவுக்காகவே நாங்கள் மீண்டும் ஒன்றுபட்டுள்ளோம்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
29 பார்வைகள்

“சிறைச்சாலை என்பது நாமல் ராஜபக்ஷவுக்கு ஒன்றும் புதிய விடயமல்ல. கடந்த நல்லாட்சி அரசின் காலத்திலும் அவர் சிறைப்படுத்தப்பட்டுள்ளார். எனவே, சிறைக்கு அனுப்புவதன் மூலம் அவர் எதற்காகவும் அச்சமடையப் போவதில்லை.” – என்று புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்ததாவது,
“நாங்கள் மஹிந்த வேண்டாம் என்று கூறிவிட்டு ரணில் விக்கிரமசிங்கவின் பக்கம் செல்லவில்லை. கடுமையான பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கித் தவித்த அந்த இக்கட்டான காலகட்டத்தில்தான் நாட்டைப் பொறுப்பேற்ற ரணில் விக்கிரமசிங்க, மிகக் குறுகிய காலத்துக்குள் நாட்டை அந்தப் பேராபத்திலிருந்து வெற்றிகரமாகப் பாதுகாத்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் எங்களுக்கும் இடையில் கடந்த காலங்களில் சில கொள்கை ரீதியான கருத்து முரண்பாடுகள் காணப்பட்டமை உண்மையே. அதற்காக இத்தகைய ஒரு நெருக்கடியான சந்தர்ப்பத்தில் நாம் பிரிந்து நிற்க முடியாது. மஹிந்த ராஜபக்ஷவுக்காகவே நாம் மீண்டும் ஒன்றுபட்டுள்ளோம்.

தற்போதைய அரசியல் மற்றும் சமூகச் சூழலில் எழுந்துள்ள நெருக்கடியான சந்தர்ப்பத்தில் சகல எதிர்க்கட்சிகளும் எந்தவித பேதமுமின்றி ஒன்றுபட வேண்டும். அந்த ஒற்றுமையே எதிர்காலத்தில் அனைவருக்கும் உரிய பாதுகாப்பாக அமையும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஊழல் வழக்குகளில் இருந்து தப்புவதற்கான வெற்றுக் கூச்சலே மொட்டுக் கட்சியின் பேரணி.!

“அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்திய மக்கள் பேரணியானது நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு எதிரான மக்கள் போராட்டமாக அமையவில்லை. மாறாக, தங்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து…

41 0 0
இலங்கை செய்திகள்

சகல எதிர்க்கட்சிகளும் உரிய தருணத்தில் ஒரே தளத்தில் ஒன்றிணைந்து களமிறங்கும்.!

இலங்கையில் தற்போது அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் சூழலில், எதிர்க்கட்சிகள் தனித்தனியாகச் செயற்படுவது கட்சிகளுக்கு இடையிலான பிளவு அல்ல என்றும், , உரிய தருணத்தில்…

42 0 0
இலங்கை செய்திகள்

நாம் ஊழலற்ற தூய்மையான ஆட்சியை வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளோம்.!

“தேசிய மக்கள் அரசு அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் அளித்த வாக்குறுதிகளுக்கு அமைவாக, ஆட்சி நிர்வாகத்தில் மக்கள் பங்கேற்பை உறுதி செய்து ஊழலற்ற ஆட்சியை கடந்த 2 வருட…

42 0 0
இலங்கை செய்திகள்

நாமல் தன்னை நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.!

“அரச நிதியை மோசடி செய்துவிட்டுச் சிறையில் உள்ள நாமல் ராஜபக்ஷ தன்னை நெல்சன் மண்டேலா என்று கூறிக்கொள்கின்றார். நெல்சன் மண்டேலா ஏன் சிறை சென்றார், ராஜபக்ஷக்கள் ஏன்…

37 0 0