அரச திணைக்களங்களை ஒன்றிணைத்து மெனிக்பாம் கிராமத்தில் நடமாடும் சேவை!
உள்ளூராட்சி வாரத்தையொட்டி வெங்கலச்செட்டிகுளம் பிரதேசசபையின் ஏற்பாட்டில் மெனிக்பாம் கிராமத்தில் அரச திணைக்களங்களை ஒன்றினைத்து நடமாடும் சேவையொன்று நடாத்தப்பட்டது.
பிரதேசசபையின் தவிசாளர் தா.மு.இம்தியாஸ் அவர்களின் ஏற்பாட்டிலும் தலைமையிலும் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்வேறுபட்ட அரச திணைக்களங்களும் கலந்துகொண்டு பொதுமக்களுக்கான சேவைகளை வழங்கியிருந்தனர்.
இந்த நடமாடும் சேவை நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.
பிரதேசசபையின் உபதவிசாளர் தே.சிவானந்தராசா, பிரதேசசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றதுடன் பெருமளவிலான பொதுமக்கள் இந்த நடமாடும் சேவையில் கலந்துகொண்டு பயன்பெற்றிருந்தனர். இதன்போது அப்பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.






