சவூதி எண்ணெய் உட்கட்டமைப்பு மீது ஆளில்லா வானூர்தி தாக்குதல்!!
சவூதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் குழாய் உட்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி தாக்குதலில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ செயற்கைக்கோள் நிழற்படங்களை அடிப்படையாகக் கொண்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் 11ஆம் திகதி இடம்பெற்ற இந்தத் தாக்குதல், ஈராக்கிலிருந்து ஏவப்பட்ட ஆளில்லா வானூர்திகள் மூலம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் சவூதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாகவும், இதனால் அந்நாட்டின் எண்ணெய் விநியோக நடவடிக்கைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 4 சதவீதம் வரை உடனடியாக பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகியுள்ளதாக சர்வதேச பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதன் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டு, எண்ணெய் விலையில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.