உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
15 செவ்வாய்

கிளிநொச்சி மாவட்ட சாரணர் கிளை சங்கத்தின் வருடாந்த சாரணர் முகாம்.!

இலங்கை செய்திகள் 8 மணி நேரம் முன்
31 பார்வைகள்

கிளிநொச்சி மாவட்ட சாரணர் கிளை சங்கத்தின் வருடாந்த சாரணர் முகாம் – 2026, கிளிநொச்சி மத்திய கல்லூரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி நேற்று வரை நடைபெற்றுள்ளது. இதன் இறுதி நாளாகிய நேற்று(13) மாலை சாரணிய மாணவர்களின் ஒன்று கூடலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான விருதுகள், பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் சாரணிய மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் மத்திய கல்லூரி மைதானத்தில் சாரண மாவட்ட ஆணையாளர் எஸ்.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் y. ஜெயச்சந்திரன் மற்றும் தேசிய சாரண சங்கத்தின் ஆணையாளர் வட மாகாண ஆணையாளர், மாவட்ட செயலக கணக்காளர், கிளிநொச்சி மாவட்ட சாரணர் கிளை சங்கத்தின் தலைவர் எஸ். பூலோகராஜா, திருகோணமலை மாவட்ட சாரணிய ஆணையாளர் எஸ்.சசிக்குமார், மதத் தலைவர்கள், சாரணிய ஆசிரியர்கள் மற்றும் சாரணிய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இம்முகாமில் கிளிநொச்சி மாவட்ட சாரணர் கிளை சங்கத்தின் கீழ் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டு கல்வி வலயங்களைச் சேர்ந்த சாரணிய மாணவர்களுடன், தென்மராட்சி கல்வி வலயத்தைச் சேர்ந்த 15 பாடசாலைகளின் சாரணிய மாணவர்களும் பங்குபற்றியுள்ளனர்.

சாரணிய மாணவர்களின் தலைமைத்துவப் பண்புகள், குழு செயற்பாடுகள், ஒழுக்கம், சமூகப் பொறுப்பு மற்றும் திறன்களை மேம்படுத்தும் வகையில் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காலணிகளுக்குள் போ@தைப்பொருள்: சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் கைது

காலணிகளுக்குள் போ@தைப்பொருட்களை ஒளித்து வைத்து வெலிக்கடை சிறைச்சாலைக்குள் கொண்டு செல்ல முயன்ற சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் ஒருவர் இன்று (14) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய,…

30 0 0
இலங்கை செய்திகள்

செப்டெம்பர் மாதத்திற்குரிய அஸ்வெசும கொடுப்பனவு குறித்த அறிவிப்பு

செப்டெம்பர் மாதத்திற்குரிய ‘அஸ்வெசும’ கொடுப்பனவு எதிர்வரும் 16ஆம் திகதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நலன்புரிப் நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை…

28 0 0
இலங்கை செய்திகள்

டிக்கோயா நகராட்சி மன்றப் பகுதியில் உள்ள 10 கடைகளுக்கு சீல்!

வாடகை செலுத்தத் தவறியதற்காக, ஹட்டன் டிக்கோயா நகராட்சி மன்றப் பகுதியில் உள்ள 10 கடைகளுக்கு சீல் வைக்க இன்று 14.09.2026 ம் திகதி அன்று ஹட்டன் டிக்கோயா…

31 0 0
இலங்கை செய்திகள்

திருக்கோவில் பிரதேச சபையில் உள்ளூராட்சி வாரம் 2026 ஆரம்பம்!

“வளமான நாடு – அழகான வாழ்வு” மற்றும் “புத்துயிர்க்கும் புதுநகரம்” என்ற தொனிப்பொருளில் 2026ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி வார நிகழ்வுகள் இன்று (14) திருக்கோவில் பிரதேச சபையில்…

33 0 0