உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்!

இந்திய செய்திகள் 2 மணி நேரம் முன்
37 பார்வைகள்

திருக்குறளை இந்தியாவின் ‘தேசிய நூல்’ என மத்திய அரசு உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தாம்பரத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்து, சர்வதேச அரங்கிலும் பிற நாட்டுத் தலைவர்களுடனான சந்திப்புகளின்போதும் திருக்குறளின் சிறப்புகளைப் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து உலகறியச் செய்து வருவதற்குத் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடனான சந்திப்பின் போது திருக்குறளின் ரஷ்ய மொழிபெயர்ப்பு புத்தகத்தைப் பிரதமர் பரிசளித்ததை வைரமுத்து நினைவு கூர்ந்தார்.

குறிப்பிட்ட சாதி, மதம் அல்லது மொழியைக் கடந்து மனிதகுலம் முழுமைக்கும் பொதுவான தத்துவங்களை எடுத்துரைப்பதாலேயே பிரதமர் திருக்குறளைப் பரிசளித்துள்ளார் என்று அவர் குறிப்பிட்டார்.

திருக்குறள் மதச்சார்பற்ற பண்பையும் உலகளாவிய மானுட மதிப்புகளையும் கொண்டுள்ளதால், அதனை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

திருக்குறளை தேசிய நூலாக மத்திய அரசு அறிவித்தால், மதுரை மல்லிகைப் பூவோடும் சேலத்து மாம்பழக் கூடையோடும் டெல்லிக்கு நேரில் வந்து பிரதமரைப் பாராட்டுவோம் என்றும் தெரிவித்தார்.

திருக்குறளுக்குத் தேசிய நூல் அந்தஸ்து வழங்குவது தமிழ் மொழிக்கும், ஒட்டுமொத்த இந்திய கலாசாரத்திற்கும் உலகளவில் மிகப்பெரிய பெருமையைச் சேர்க்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

சாலமன் பாப்பையாவின் பூதவுடலுக்கு முழு அரச மரியாதையுடன் இறுதிக் கிரியை

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவின் பூதவுடலுக்கு முழு அரச மரியாதையுடன் இறுதிக் கிரியை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மூத்த தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான…

17 0 0
இந்திய செய்திகள்

லண்டனில் நடிகர் அஜித் பங்கேற்கும் சிற்றூந்து பந்தயத்தை தொடங்கி வைக்கிறார் விஜய்!

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் விஜய், லண்டனில் நடைபெறும் சில்வர்ஸ்டோன் (Silverstone) சிற்றூந்து பந்தய போட்டியை கொடியசைத்து ஆரம்பித்து வைக்க…

134 0 0
இந்திய செய்திகள்

தமிழக முதல்வர் விஜய்யின் மகளின் பெயரில் பரவும் புகைப்படங்கள்

தமிழ்நாடு முதலமைச்சரும் நடிகருமான விஜய்யின் குடும்பம் தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போதெல்லாம், அவை ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில்,…

121 0 0
இந்திய செய்திகள்

பயணிகள் வானூர்தியில் லண்டனைச் சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய்!

தமிழக முதலமைச்சர் விஜய் தனது முதல் வெளிநாட்டு அரசு முறை பயணமாக இன்று (11) லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார். தமிழக பொருளாதாரத்தை 2036-ஆம் ஆண்டிற்குள் 1.5 ட்ரில்லியன்…

180 0 0