உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
13 ஞாயிறு

ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரியில் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு விழா.!

இலங்கை செய்திகள் 13 மணி நேரம் முன்
47 பார்வைகள்

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் 3 ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரியில், 2025ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் ஏற்பாட்டில், தங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களைக் கௌரவிக்கும் சிறப்பு நிகழ்வு இன்று 12ஆம் திகதி பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் திரு. ரூப்பஸ் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

தங்களுக்கு கல்வி அறிவையும் வாழ்க்கைப் பாதைக்கான வழிகாட்டலையும் வழங்கிய ஆசிரியர்களுக்கு நன்றியையும் மரியாதையையும் வெளிப்படுத்தும் வகையில் மாணவர்களால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வின் சிறப்பம்சமாக மாணவர்களின் கலை, கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்று, விழாவை மேலும் சிறப்பித்தன. இதன்போது பாடசாலை அதிபர் திரு. ரூப்பஸ் அவர்களும் மாணவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

மேலும், மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மாணவர்கள் தங்களது ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் சேவையையும் நினைவுகூர்ந்து நன்றியை வெளிப்படுத்திய இந்நிகழ்வு, ஆசிரியர் – மாணவர் உறவின் உன்னதத்தையும் கல்வியின் மீதான மாணவர்களின் மதிப்பையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது.!

சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நால்வரை மூன்று டிங்கி படகுகளுடன் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் மற்றும் கட்டைக்காடு கடல் மற்றும்…

60 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி.!

கிளிநொச்சி அக்கராயன்குளம் பிரதேசத்தில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு ஒவ்வொரு குழந்தைகளுக்கும் எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வு பேரணியும் சிறுவர் பாதுகாப்பு நிகழ்வும்…

46 0 0
இலங்கை செய்திகள்

வீடொன்றின் மீது கவிழ்ந்த பாரவூர்தி.!

பதுளை – மஹியங்கனை வீதியில், மடித்தலை பகுதியில் வீடு ஒன்றின் மீது பாரவூர்தி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் வீட்டில் இருந்த தந்தை அவரது மகன் மற்றும்…

39 0 0
இலங்கை செய்திகள்

மணல் விநியோக நடவடிக்கைகள் தொடர்பாக மக்களை தெளிவூட்டும் ஊடக சந்திப்பு.!

கரைச்சி பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மணல் விநியோக நடவடிக்கைகள் தொடர்பாக பொதுமக்களை தெளிவூட்டும் ஊடக சந்திப்பை கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் ஏற்பாடு…

42 0 0