உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
13 ஞாயிறு

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது.!

இலங்கை செய்திகள் 12 மணி நேரம் முன்
60 பார்வைகள்

சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நால்வரை மூன்று டிங்கி படகுகளுடன் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் மற்றும் கட்டைக்காடு கடல் மற்றும் கடற்கரைப் பகுதிகளை உள்ளடக்கிய வகையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தின் மதுரங்குளிய மற்றும் பல்லியா வாசல்பாடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட படகுகள் மற்றும் வெற்றிலைக்கேணி கடற்படை முகாம் மூலம் கடந்த 11ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, மின் விளக்குகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட சந்தேக நபர்களை கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்தனர்.

இதன்போது மூன்று டிங்கி படகுகளும், 1,900 க்கும் அதிகமான கிலோகிராம் மீன் தொகையும் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சந்தேக நபர்கள், டிங்கி படகுகள் மற்றும் மீன் தொகையை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரியில் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு விழா.!

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் 3 ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரியில், 2025ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் ஏற்பாட்டில், தங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களைக் கௌரவிக்கும்…

46 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி.!

கிளிநொச்சி அக்கராயன்குளம் பிரதேசத்தில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு ஒவ்வொரு குழந்தைகளுக்கும் எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வு பேரணியும் சிறுவர் பாதுகாப்பு நிகழ்வும்…

45 0 0
இலங்கை செய்திகள்

வீடொன்றின் மீது கவிழ்ந்த பாரவூர்தி.!

பதுளை – மஹியங்கனை வீதியில், மடித்தலை பகுதியில் வீடு ஒன்றின் மீது பாரவூர்தி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் வீட்டில் இருந்த தந்தை அவரது மகன் மற்றும்…

38 0 0
இலங்கை செய்திகள்

மணல் விநியோக நடவடிக்கைகள் தொடர்பாக மக்களை தெளிவூட்டும் ஊடக சந்திப்பு.!

கரைச்சி பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மணல் விநியோக நடவடிக்கைகள் தொடர்பாக பொதுமக்களை தெளிவூட்டும் ஊடக சந்திப்பை கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் ஏற்பாடு…

41 0 0