உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
11 வெள்ளி

பாடசாலையை மீள திறக்குமாறு கோரி போராட்டம்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
87 பார்வைகள்

கொத்மலை கல்வி வலயத்திற்கு உற்பட்ட டன்சினன் குறிஞ்சி தமிழ் வித்தியாலயம் பாடசாலை விடுமுறை முடிந்தும் திறக்காத காரணத்தால் பெற்றோர்களும் மாணவர்களும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த பாடசாலை அமைந்துள்ள டன்சினன் கீழ் பிரிவு கடந்த டித்வா புயலின் போது இடிபாடுகளுக்கு உள்ளாகி இருந்தது. இந்நிலையில் பாடசாலையும் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலையில் காணப்பட்டது. பின்னர் மக்கள் மீண்டும் சொந்த வீடுகளுக்கு திரும்பிய நிலையில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.

ஆகஸ்ட் மாதம் பாடசாலை விடுமுறை நிறைவடைந்தும் பாடசாலை திறக்காமைனால் பெற்றோர்களும் மாணவர்களும் பாடசாலையை திறக்க கோரி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த பாடசாலையிலும் ஊரிலும் தற்போது எந்த பாதிப்பும் கிடையாது எனவே பல கல்வியியலாளர்களை உருவாக்கிய பாடசாலையை மீள திறக்க வேண்டுமென்பது இவர்களின் கோரிக்கை ஆகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யானை தாக்கி ஒருவர் உ*யிரிழப்பு.!

கொடவெஹெர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுதலியாவ குளத்திற்கு அருகில் காட்டுயானை தாக்கியதில் பலத்த காயமடைந்த வயோதிபர் ஒருவர் நிக்கவரெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று…

97 0 0
இலங்கை செய்திகள்

பேருந்து நிலையத்தில் சுகாதார சீர்கேடு; பயணிகள் விசனம்.!

அக்கரைப்பற்று மாநகர சபைக்குச் சொந்தமான அக்கரைப்பற்று மத்திய பேருந்து நிலையம் உரிய முறையில் துப்புரவு செய்யப்படாமல் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுவதாக பயணிகளும் பொதுமக்களும் விசனம் தெரிவித்துள்ளனர். பேருந்து…

111 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துகளை அவசரமாக வழங்குமாறு கோரிக்கை.!

கொழும்பு – ஹட்டன் போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்காக ஹட்டன் டிப்போவிற்கு புதிதாக வரவழைக்கப்பட்ட பேருந்துகளை அவசரமாக ஒதுக்கி வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் ஹட்டன்…

97 0 0
இலங்கை செய்திகள்

ஊக்குவிப்புத் தொகையால் மாத்திரம் குழந்தை பிறப்பு வீதத்தை அதிகரிக்க முடியாது.!

குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்குவதால் மாத்திரம் இலங்கையில் குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிக்க முடியாதென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, குழந்தைகளைப்…

64 0 0