பாடசாலையை மீள திறக்குமாறு கோரி போராட்டம்.!
கொத்மலை கல்வி வலயத்திற்கு உற்பட்ட டன்சினன் குறிஞ்சி தமிழ் வித்தியாலயம் பாடசாலை விடுமுறை முடிந்தும் திறக்காத காரணத்தால் பெற்றோர்களும் மாணவர்களும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
குறித்த பாடசாலை அமைந்துள்ள டன்சினன் கீழ் பிரிவு கடந்த டித்வா புயலின் போது இடிபாடுகளுக்கு உள்ளாகி இருந்தது. இந்நிலையில் பாடசாலையும் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலையில் காணப்பட்டது. பின்னர் மக்கள் மீண்டும் சொந்த வீடுகளுக்கு திரும்பிய நிலையில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.
ஆகஸ்ட் மாதம் பாடசாலை விடுமுறை நிறைவடைந்தும் பாடசாலை திறக்காமைனால் பெற்றோர்களும் மாணவர்களும் பாடசாலையை திறக்க கோரி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்த பாடசாலையிலும் ஊரிலும் தற்போது எந்த பாதிப்பும் கிடையாது எனவே பல கல்வியியலாளர்களை உருவாக்கிய பாடசாலையை மீள திறக்க வேண்டுமென்பது இவர்களின் கோரிக்கை ஆகும்.



