உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
11 வெள்ளி

பேருந்து நிலையத்தில் சுகாதார சீர்கேடு; பயணிகள் விசனம்.!

இலங்கை செய்திகள் 44 நிமிடங்கள் முன்
115 பார்வைகள்

அக்கரைப்பற்று மாநகர சபைக்குச் சொந்தமான அக்கரைப்பற்று மத்திய பேருந்து நிலையம் உரிய முறையில் துப்புரவு செய்யப்படாமல் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுவதாக பயணிகளும் பொதுமக்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.

பேருந்து நிலையப் பகுதியில் மாட்டு எரு உள்ளிட்ட கழிவுகள் மற்றும் குப்பைக் கூளங்கள் குவிந்து காணப்படுவதால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், பிளாஸ்டிக் போத்தல்களை சேகரிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள கூடையும் நிரம்பிய நிலையில் காணப்படுவதாகவும், அதிலுள்ள குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் போத்தல்கள் பலத்த காற்று வீசும் நேரங்களில் காற்றில் பறந்து பொதுமக்கள் மீது விழும் நிலை காணப்படுவதாகவும் பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பொதுமக்கள் தினமும் அதிகளவில் பயன்படுத்தும் முக்கியமான பேருந்து நிலையம் இவ்வாறு சுகாதாரமற்ற நிலையில் காணப்படுவது கவலைக்குரிய விடயம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, அக்கரைப்பற்று மத்திய பேருந்து நிலையப் பகுதியில் காணப்படும் மாட்டு எரு, குப்பை கூளங்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை உடனடியாக அகற்றி, பேருந்து நிலையத்தை முறையாக துப்புரவு செய்து சுகாதாரமான சூழலை ஏற்படுத்தித் தருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசுக்கு எதிராக நாளை மாபெரும் உணவு தவிர்ப்பு போராட்டம்.!

தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தமிழ் மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் கூட இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை என்று குற்றம்…

85 0 0
இலங்கை செய்திகள்

கைக்குண்டுத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி மீட்பு.!

தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தை பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி ஒன்று, பாதுக்க இஹல போபே பகுதியில் கைவிடப்பட்ட…

103 0 0
இலங்கை செய்திகள்

யானை தாக்கி ஒருவர் உ*யிரிழப்பு.!

கொடவெஹெர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுதலியாவ குளத்திற்கு அருகில் காட்டுயானை தாக்கியதில் பலத்த காயமடைந்த வயோதிபர் ஒருவர் நிக்கவரெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று…

101 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துகளை அவசரமாக வழங்குமாறு கோரிக்கை.!

கொழும்பு – ஹட்டன் போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்காக ஹட்டன் டிப்போவிற்கு புதிதாக வரவழைக்கப்பட்ட பேருந்துகளை அவசரமாக ஒதுக்கி வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் ஹட்டன்…

101 0 0